வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

24 டிச., 2012

உன்னத தலைவரின் பிறந்த நாள்






தேவன் 
தம்முடைய ஒரே பேறான 
குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ 
அவன் கெட்டுப் போகாமால் 
நித்திய ஜீவனை அடையும்படிக்கு 
அவரை தந்தருளி, 
இவ்வளவாய் உலகத்தில் 
அன்பு கூர்ந்தார்.(யோவான் 3:16)

உலக வரலாற்றில் மறக்க முடியாத,
மறுக்க முடியாத உன்னத தலைவரின் பிறந்த நாள் இன்று.
அன்பு, தியாகம், எளிமை,
முன் மாதிரியான ஓர் நல்வாழ்க்கை என
அவரை போல் வாழ்ந்தவர் ஒருவரும் இல்லை
இந்த பூமியில்.

தேவனின் குமாரன் என்ற
மகிமையை தியாகம் செய்தவர்.
அழிந்து கொண்டிருக்கும்
உலக மக்களின் மேல்
அன்பு கொண்டதால்தான்
அவரின் தியாகம் உணர்த்தப்பட்டது.

அரண்மனையிலோ, மாட மாளிகையிலோ
அவர் பிறக்காமல்,
நாற்றமடுத்த மாட்டுத் தொழுவத்தில் பிறந்து,
கந்தை துணியில் சுற்றி கிடத்தப்பட்டதால்
அவரின் எளிமை அறியப்பட்டது.

சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்,
அடுத்தவனின் தவறை
உலகறிய செய்யும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த காலத்தில்,
கையும், மெய்யுமாய் விபச்சாரத்தில்
பிடிபட்ட பெண்ணுக்கு,
தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருந்தும்
அதை செய்ய மறுத்து
அவளை மன்னித்து,
இனி நீ பாவம் செய்யாதே என்று கூறி,
மறுவாழ்வு அளித்து
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.

இன்னும் எத்தனையோ
சொல்லலாம் அவரை குறித்து.

என்னை உயர்த்த
தன்னை தாழ்த்திய
அந்த உன்னதரை
உள்ளத்தில் வரவேற்போம்.
அர்த்தமுள்ள வகையில்
அவரின் பிறந்த நாளை
கொண்டாடி மகிழ்வோம்.
அனைவருக்கும்
இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்